நியாயமான கோரிக்கைகள் தி.மு.க அரசு அமைந்தவுடன் நிறைவேற்றப்படும் -மு.க.ஸ்டாலின்

Published by
Venu

ஆசிரியர்கள் – அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் தி.மு.க அரசு அமைந்தவுடன் நிறைவேற்றப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நியாயமான கோரிக்கைகளுக்காக நடத்தப்பட்ட ஜாக்டோ – ஜியே அமைப்பினரின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய அதிமுக ஆட்சி 5068 ஆசிரியர்கள் – அரசு ஊழியர்களுக்கு 17(பி)-யின் கீ குற்றக் குறிப்பாணைகள் வழங்கி போரின்னலுக்கு உள்ளாக்குவது கண்டனத்திற்குரியது.போராட்டத்தை திரும்பப் பெற முதலமைச்சரே வேண்டுகோள் விடுத்து – பிறகு ஒழுங்கு நடவடிக்கையும் எடுத்திருப்பது வஞ்சகமான அணுகுமுறை.

ரகசியக் குறிப்பேடு நீக்கம், குடும்பங்களுக்கு பாதுகாப்பு நிதி, கருணை அடிப்படையில் வேலை, ஈட்டிய விடுப்பை சரண் செய்தால் பணம், திருமணம் – வாகனம் – வீடு கட்டக் கடன், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம், சத்துணவுப் பணியாளர்களுக்கு கால முறை ஊதியம், சாலைப்பணியாளர் – மக்கள் நலப்பணியாளர் நியமனம் கலந்தாய்வு மூலம் பணி மாறுதல், ஆசிரியர் நியமனம் என திமுக ஆட்சிதான் ஆசிரியர்கள் – அரசு ஊழியர்கள் வாழ்வில் ஒளியேற்றி உயர்வு தந்தது.

அதிமுக ஆட்சி, நள்ளிரவில் கைது செய்து – ஒரே நாளில் லட்சக்கணக்கானவர்களை டிஸ்மிஸ் செய்த போது அரணாக அன்றும் இன்றும் நிற்கிறது திமுக.அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் மீதான துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும். மக்களின் பேராதரவுடன் திமுக ஆட்சி அமைந்ததும் அவர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

4 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

5 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

7 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

7 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

8 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

9 hours ago