செம்மரம் கடத்தல் – தமிழகத்தை சேர்ந்த 22 பேர் கைது!

Published by
பாலா கலியமூர்த்தி

ஆந்திரா மாநிலத்தில் செம்மரம் கடத்த முயன்ற தமிழகத்தை சேர்ந்த 22 பேர் உட்பட மொத்தம் 25 பேரை அம்மாநில தடுப்பு பிரிவு காவல்துறை கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் செம்மரங்கள் அதிகம் இருப்பதால், இதனை வெட்டி பல காலங்களாக கடத்தல் சம்பவம் நடந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் ஆந்திர மாநில அரசு, செம்மரம் கடத்தல் தடுப்பு பிரிவு ஒன்றை உருவாக்கி  செம்மரம் கடத்தலை தடுத்து வருகின்றனர்.

இந்த சமயத்தில் ஆந்திராவில் செம்பரம் கட்டை கடத்துவதாக தடுப்பு பிரிவு காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சாலை வழியாக செல்லும் லாரிகளை சோதனை நடத்தி வந்தனர். இந்த சோதனையின்போது சுமார் 20 பேர் கொண்ட குழு ஒரு லாரியில் சுமார் 11 செம்மரம் கட்டைகள் கடத்தியாக கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபோன்று மற்றொரு இடத்தில் செம்மரம் வெட்டி கடத்துவது தெரிவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்கு சென்று செம்மரம் கடத்த முயன்றவர்களை கைது செய்தனர். இந்த நிலையில், ஆந்திராவில் செம்மரம் கடத்த முயன்ற தமிழகத்தை சேர்ந்த 22 பேர் உட்பட மொத்தம் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரூ.60 லட்சம் மதிப்பிலான 21 செம்மரம் கட்டைகளை பறிமுதல் செய்து, ஆந்திர காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு லாரி, 2 இருசக்கர வாகனம், செல்போன்கள் மற்றும் மரம் அறுக்க பயன்படுத்தப்படும் ரம்பம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

22 minutes ago

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

3 hours ago

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

5 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

6 hours ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

7 hours ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

9 hours ago