4 ஆண்டு சிறை தண்டனை நிறைவடைந்து, சிறையில் இருந்து இன்று சற்றுமுன் விடுதலையான சசிகலா பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழகம் வருகிறார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவு பெற்று இன்று காலை 10.30 மணிக்கு சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆனார். இதனிடையே, கடந்த 20-ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக விக்டோரியா அரசு மருத்துவ கல்லுரி மருத்துவமனையில் தொடர்ந்து 5 நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற்று சசிகலாவை, இன்று காலை சிறைத்துறை அதிகாரிகள் நேரில் சென்று சசிகலாவிடம் விடுதலைக்கான கையொப்த்தை பத்திரத்தில் பெற்றனர்.
மேலும், விடுதலை செய்யப்பட்டதற்கான ஆவணங்களை மருத்துவமனையில் சசிகலாவிடம் சிறைத்துறையினர் ஒப்படைத்தனர். இந்நிலையில், சிறையில் இருந்து விடுதலையான சசிகலா பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழகம் திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக சசிகலாவின் சகோதரர் மகன் ஜெய் ஆனந்த் தெரிவித்தாக கூறப்படுகிறது. விக்டோரியா மருத்துவமனையில் சசிகலா தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என்றும் கூறியுள்ளார். சசிகலாவின் கொரோனா சிகிச்சை ஜனவரி 31-ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…