எலி மருந்து, பால்டாயில் விற்பனைக்கு கட்டுப்பாடுகள்.. சாணம் பவுடருக்கு விரைவில் தடை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published by
பாலா கலியமூர்த்தி

தனி நபர்களுக்கு எலி மருந்து, பால்டாயில் விற்பனை செய்ய தடை விதிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல சுகாதார நிறுவனத்தில், உலக தற்கொலை தடுப்பு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15,000 முதல் 16,000 பேர் தற்கொலையால் இறக்கின்றனர். இந்த எண்ணிக்கை விபத்துக்களில் இறப்பவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என கூறினார்.

தூக்கு போட்டு தற்கொலை செய்துகொள்பவர்கள் 15 – 20% மட்டும் உள்ளார்கள். மற்றவர்கள் எலி மருந்து, பால்டாயில் மற்றும் சாணம் பவுடர் சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்கிறார்கள் என தெரிவித்தார். விஷப் பொருட்களின் கலவை கொண்ட சாணம் பவுடர் உற்பத்தி செய்யப்படுவதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் அதற்கான தடை அறிவிப்பு விடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

எலி மருந்து, பால்டாயில் போன்றவைகளை கடைகளில் பாதுகாப்பாக லாக்கரில் வைத்து விற்க வேண்டும் என்றும் வெளிப்படையாக தெரியும் வகையில் விற்கக்கூடாது எனவும் கூறினார். அதேபோல் தற்கொலைக்கு காரணங்களாக இருக்கும் எலி மருந்து, பால்டாயில் உள்ளிட்டவற்றை தனி ஒருவருக்கு வழங்கக்கூடாது என்றும் ஓரிருவர் சேர்ந்து வந்தால் மட்டுமே வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

தனி நபர்களுக்கு எலி மருந்து, பால்டாயில் விற்பனை செய்ய தடை விதிக்கப்படும் என்றும் எலி மருந்து, பால்டாயில் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் அரசாணைகளை துறை அலுவலர்கள் மூலம் விடுக்க இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், 104 ஹெல்ப்லைன் இதுவரை நீட் யுஜி எழுதிய சுமார் 10,000 மாணவர்களை அணுகி அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கியுள்ளது. ஆலோசகர்கள் பெற்றோர்களிடம் பேசி, தங்கள் பிள்ளைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினர். பல மாணவர்கள் தங்கள் பெற்றோர்கள் மருத்துவ படிப்புகளை படிக்க வற்புறுத்துவதாக புகார் தெரிவித்தாக கூறினார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…

8 hours ago

ஆய்வில் அதிர்ச்சி : “குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீங்க” எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை!

டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…

9 hours ago

பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப அவகாசம் ஜூலை 21 வரை நீட்டிப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…

11 hours ago

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

12 hours ago

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 200 மாணவர்கள் தேர்வு!

சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…

13 hours ago

புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…

13 hours ago