Congress Candidates Tharagai - Robert Bruce [File Image]
Election2024 : நெல்லை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பளாராக ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 இடங்களும், புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கப்பட்டது. இதில் தமிழகத்தில் உள்ள 9 தொகுதிகளில் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் வரையில் காங்கிரஸ் அறிவித்து இருந்தது.
இந்நிலையில், இன்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற உள்ள பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க உள்ளார் என ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பிரச்சார கூட்டத்தில் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி வேட்பாளர்களை அறிமுகம் செய்ய உள்ளார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்போது வரையில் கன்னியாகுமரி தொகுதி வேட்பாளராக விஜய் வசந்த் (காங்கிரஸ்) மட்டுமே அறிவிக்கப்பட்டு இருந்தார்.
இதனால், நெல்லை தொகுதி வேட்பாளர் எப்போது அறிவிக்கப்படுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது , நெல்லை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் என்பவரை அறிவித்துள்ளது காங்கிரஸ் தலைமை. இவர் தேசிய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும், கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் , விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தாரகை கத்பர்ட் எனும் பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…