கொரோனா பாதிக்கப்பட்டவர்களை சென்னை மாநகராட்சி மண்டல வாரியாக பிரித்து பட்டியல் வெளியிட்டு உள்ளது. அதில், ராயபுரம் முதலிடத்தில் உள்ளது.
தமிழகத்தில், கொரோனா வேகமாக பரவி வருவதால் 1,520 பேர் பாதிப்படைந்து உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு 17 பேர் பலியாகி உள்ளனர்.மேலும் 457 பேர்குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இங்கு, 303 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களை சென்னை மாநகராட்சி 15 மண்டல வாரியாக பிரித்து பட்டியல் வெளியிட்டு உள்ளது.
அந்த பட்டியலில், ராயபுரம் முதல் இடத்தில் உள்ளது. ராயபுரத்தில் 92 பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து, திரு.வி.க. நகர் 39, தேனாம்பேட்டை 38, தண்டையார்பேட்டை 37, கோடம்பாக்கம் 31, அண்ணா நகர் 27 பேர் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
மேலும், மணலி மற்றும் அம்பத்தூரில் மட்டும் யாரும் பாதிக்கப்படவில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…