தமிழகத்தில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆங்காகே வியாபாரங்கள் களைகட்ட தொடங்கியது, அதிலும் சந்தைகளில் மும்மரமாக காணப்படுகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் காராமணிக்குப்பதில் வாரம்தோறும் திங்கள் கிழமையில் நடைபெறும் கருவாடு காய்கறிச் சந்தை மிகவும் பிரபலமானது. இதில் ஏராளமான மற்றும் புதிய அறியவகை கருவாடுகள் பங்குபெறும். இச்சந்தை வழக்கமாக அதிகாலை 4 மணிக்கு தொடங்கும், ஆனால் பொங்கல் பண்டிகையையொட்டி இந்த வாரம் நள்ளிரவு ஒரு மணிக்கு தொடங்கியது. இந்த சந்தையில் கடலூர், ராமேஸ்வரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர்.
இந்நிலையில், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தில் இருந்தும் கருவடுகளை வாங்க சில்லரை வியாபாரிகளும், பொதுமக்களும் கூட்டம் கூட்டமாக குவிந்தனர். அவ்வப்போது டீசல் விலை உயர்வு மற்றும் மீன்கள் வரத்துக் குறைவால் கருவாடு விலை அதிகரித்து காணப்பட்டது. மேலும், ஜிஎஸ்டியால் கடந்த ஆண்டு விற்பனை முழுவதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு ஜிஎஸ்டி குறைவு காரணமாகவும் விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறுகிண்டனர். பின்பு நள்ளிரவு ஒரு மணியிலிருந்து காலை 6 மணி வரை நடைபெற்ற இன்றைய சந்தையில் சுமார் ரூ.1 கோடி வரை விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…