தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்காக 3 மாதங்களில் ரூ. 10 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. அந்த வகையில்நேற்று 4,328 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 1,42,798 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று 3,035 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதுவரை கொரோனாவில் இருந்து 92,567 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது.
இந்நிலயில் சென்னையில் உள்ள கொடுங்கையூர் பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளை அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வு செய்தார்.இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்காக 3 மாதங்களில் ரூ. 10 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதால் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…