கொரோனாவிற்காக தமிழகத்தில் 3 மாதங்களில் ரூ.10,000 கோடி ரூபாய் செலவு- அமைச்சர் பாண்டியராஜன்

Published by
Venu

தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்காக 3  மாதங்களில் ரூ. 10 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. அந்த வகையில்நேற்று  4,328 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 1,42,798 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று 3,035 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதுவரை கொரோனாவில் இருந்து 92,567 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது.

இந்நிலயில் சென்னையில் உள்ள கொடுங்கையூர் பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளை அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வு செய்தார்.இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,  தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்காக 3  மாதங்களில் ரூ. 10 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதால் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

அன்புமணி நடைப்பயணத்துக்கு தடை கோரி ராமதாஸ் மீண்டும் மனு.!

அன்புமணி நடைப்பயணத்துக்கு தடை கோரி ராமதாஸ் மீண்டும் மனு.!

சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…

3 hours ago

கேரள கன்னியாஸ்திரிகள் மீது ஆள்கடத்தல், கட்டாய மதமாற்ற வழக்குப்பதிவு – மு.க.ஸ்டாலின் கண்டனம்.!

கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…

3 hours ago

நாய்-க்கு இருப்பிடச் சான்றிதழ்.., வினோத சம்பவத்தால் பீகாரில் எழுந்தது சர்ச்சை.!

பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…

4 hours ago

நெல்லை அருகே நடந்த ஆணவக் கொலையில் கைதான இளைஞரின் புகைப்படம் வெளியீடு.!

நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…

4 hours ago

“சிவகாசி தொகுதியில்தான் போட்டியிடுவேன்” – கண்ணீர் மல்க சூளுரைத்த ராஜேந்திர பாலாஜி.!

சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…

5 hours ago

பாஜக, திமுக நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் – விஜய் அறிக்கை.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…

5 hours ago