#குட் நியூஸ்: ரூ.12,110 கோடி பயிர் கடன் தள்ளுபடி – விவசாயிகள் பெரும் வரவேற்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர் கடன்கள் ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்பட்டதை விவசாயிகள் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

கடந்த 2-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் கூட்டத்தொடர் குறித்து முடிவு எடுக்கப்பட்டது. இதில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், பதிலுரையும் நடைபெற்றது. இதன்பின் சட்ட மசோதா ஆய்வு செய்தலும், நிறைவேற்றுதலும் நடைபெற்று வருகிறது. இதில், பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளார்.

பயிர் கடன் தள்ளுபடி மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டதாக தெரிவித்து, முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது, எழுவாரை எல்லாம் பொறுத்து என்ற குறளையும் மேற்கொளக்காட்டியுள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டில் விவசாயிகளின் கூட்டுறவு வங்கி பயிர் கடனை ரத்து செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வரின் பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு விவசாயிகள் வரவேற்பு அளித்து வருகின்றனர். இதுகுறித்து பேசிய விவசாய சங்கத்தின் பிஆர் பாண்டியன், நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தியதை, எதிர்பார்க்காத நேரத்தில் முதல்வர் அறிவித்துள்ளது மிகுந்த வரவேற்புக்குரியது. இதனை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம், முதல்வரை பாராட்டுகிறோம் என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், கொரோனா காலத்தில் முழுவதும் அழிந்துவிட்டது. பொருளாதாரம் முற்றிலும் நலிவடைத்துள்ளது.

விவசாயிகள் உற்பத்தியை அதிகரித்ததால் தான் இந்திய பொருளாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது என பிரதமரே கூறியுள்ளார். ஆனால், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுக்கிறார். கொரோனாவால் விவசாயிகள் இழந்த இழப்புக்கு பிரதமர் இதுவரை பங்கெடுத்துக்கவில்லை. ஆகையால், விவசாயிகளின் நலன் கருதி, வங்கிகள் கடனையும் தள்ளுபடி செய்யவேண்டும். மேலும், மறு உற்பத்திக்கு விவசாயிகள் ஈடுபடுவதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஈரான் கொடுத்த கொலை மிரட்டல்? டிரம்ப் சொன்ன பதில்!

ஈரான் கொடுத்த கொலை மிரட்டல்? டிரம்ப் சொன்ன பதில்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…

7 minutes ago

எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் மாதிரி விஜய் அரசியல் செய்யணும்- ரோஜா அட்வைஸ்!

திருப்பதி : ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான ரோஜா, நடிகர் விஜய்யின் அரசியல்…

47 minutes ago

INDvsENG : ‘வா வந்து பாரு’…ஆர்ச்சருக்கு அலர்ட் கொடுத்த ரிஷப் பண்ட்!

லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் துணைக் கேப்டனும்,…

2 hours ago

அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது! ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…

2 hours ago

பாஜகவின் ஒரிஜினல் வாய்ஸ் எடப்பாடி பழனிசாமி- முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை…

3 hours ago

“படகுகளில் த.வெ.க. பெயர்.., மீனவர்களை மிரட்டும் தி.மு.க. அரசு” – விஜய் கண்டனம்.!

சென்னை : படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? என்று அரசுக்கு விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ஏற்கெனவே…

3 hours ago