BREAKING: “தாக்கப்பட்ட சுங்கச்சாவடியில் ரூ.18 லட்சம் காணவில்லை”என புகார்.!

Published by
murugan
  • கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே உள்ள பரனூரில் சுங்கச்சாவடியில் உள்ள  12 பூத்களும் பயணிகளால் சூறையாடப்பட்டது.
  • சுங்கச்சாவடி மோதலின் போது ரூ.18 லட்சம் பணம் காணவில்லை என காவல் நிலையத்தில் சுங்கச்சாவடி பொறுப்பாளர் புகார் கொடுத்து உள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே உள்ள பரனூரில் சுங்கச்சாவடியில் திருச்சிக்கு சென்ற அரசு பேருந்து ஓட்டுனருக்கு , சுங்கச்சாவடி ஊழியருக்கு இடையே கட்டணம் செலுத்துவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

அப்போது அரசு பேருந்து ஓட்டுநரையும் , நடத்துநரையும் சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் பேருந்தை சுங்கச்சாவடிக்கு குறுக்கே நிறுத்தி உள்ளார்.இதைத்தொடர்ந்து அங்கு 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் கோவத்தில் சுங்கச்சாவடியில் இருந்த 12 பூத்களில் இருந்த  கணினி உள்ளிட்ட பொருள்களை பயணிகள் அடித்து நொறுக்கினர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் டிரைவர் , நடத்துனர் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் என 4 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்தனர்.இந்நிலையில் சுங்கச்சாவடி முழுவதும் சூறையாடப்பட்டதால் சேதம் அடைந்த பொருட்களை மாற்றி சரிசெய்ய ஒருவார காலம் ஆகும் என கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து  கடந்த இரண்டு நாள்களாக வாகனங்களுக்கு கட்டண வசூல் செய்யாமல் இலவசமாக செல்கின்றனர்.இந்நிலையில் சுங்கச்சாவடி மோதலின் போது ரூ.18 லட்சம் பணம் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.

சம்பவத்தன்று மொத்தம் உள்ள 12 பூத்களில் இருந்தும் ,அலுவலகத்தில் இருந்தும் வசூலான ரூ.18 லட்சம் பணம் காணவில்லை என சுங்கச்சாவடி பொறுப்பாளர் புகார் கொடுத்து உள்ளார்.இந்த சுங்கச்சாவடியில் ஒரு நாளைக்கு ரூ.15 லட்சத்திற்கு மேல் வசூல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

34 minutes ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

1 hour ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

1 hour ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

3 hours ago

காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவரனும்! அழைப்பு விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…

4 hours ago

“இந்தி கட்டாயம் என்ற முடிவு வாபஸ்”…,மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் அறிவிப்பு!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் இந்தியை மூன்றாவது மொழியாக கட்டாயமாக்குவதற்கு மாநில அரசு…

4 hours ago