ஆரணி கூட்டுறவு நகர வங்கியில் போலி நகைகள் வைத்து ரூ.2.39 கோடி அளவில் கடன் பெற்று மோசடி என கூட்டுறவுத்துறை தகவல்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கூட்டுறவு நகர வங்கியில் சுமார் ரூ.2.39 கோடி அளவில் 77 நபர்களுக்கு போலி நகைக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்று கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.
போலி நகைக்கடன் வழங்க உறுதுணையாக இருந்த வாங்கி பணியாளர், நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 3 பேர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்காலிக நீக்கம் செய்து கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
நகைக்கடன்கள் குறித்து ஆய்வு செய்து திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி இணைப்பதிவாளர் கூட்டுறவுத்துறைக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார். கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குட்பட்ட நகைக்கடன் முறைகேடை தொடர்ந்து பொது நகைக்கடன்களில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்த, வங்கியில் ஏதேனும் முறைகேடு உள்ளதா என்று ஆய்வு செய்ய, ஏற்கனவே தமிழக அரசு குழு அமைப்பு ஆய்வு மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…