பெட்ரோல், டீசல் வரி மூலம் கடந்த நிதியாண்டில் ரூ.23 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளது என்று தமிழக நிதித்துறை செயலர் முருகானந்தம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். தமிழக அரசின் முழுமையான பொது பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கலான பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதித்துறை செயலர் முருகானந்தம், பெட்ரோல், டீசல் வரி மூலம் ரூ.23 ஆயிரம் கோடியும், கனிம வளங்கள் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், 2022-23 நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.40 ஆயிரம் கோடி வருவாய் வரும் என எதிர்பார்க்கிறோம். 2021-22 நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.36 ஆயிரம் கோடி வருவாய் வந்ததாகவும் தெரிவித்தார். கடந்த நிதியாண்டை விட 7% முதல் 8% வரை கூடுதல் வருவாய் டாஸ்மாக் மூலம் கிடைத்துள்ளது எனவும் கூறினார். இதனிடையே பேசிய அவர், வருவாய் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்வதே அரசின் குறிக்கோள் என்றும் அடுத்த நிதியாண்டில் நிதி பற்றாக்குறையை 3.62% ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…