பெட்ரோல், டீசல் வரி மூலம் கடந்த நிதியாண்டில் ரூ.23 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளது என்று தமிழக நிதித்துறை செயலர் முருகானந்தம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். தமிழக அரசின் முழுமையான பொது பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கலான பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதித்துறை செயலர் முருகானந்தம், பெட்ரோல், டீசல் வரி மூலம் ரூ.23 ஆயிரம் கோடியும், கனிம வளங்கள் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், 2022-23 நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.40 ஆயிரம் கோடி வருவாய் வரும் என எதிர்பார்க்கிறோம். 2021-22 நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.36 ஆயிரம் கோடி வருவாய் வந்ததாகவும் தெரிவித்தார். கடந்த நிதியாண்டை விட 7% முதல் 8% வரை கூடுதல் வருவாய் டாஸ்மாக் மூலம் கிடைத்துள்ளது எனவும் கூறினார். இதனிடையே பேசிய அவர், வருவாய் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்வதே அரசின் குறிக்கோள் என்றும் அடுத்த நிதியாண்டில் நிதி பற்றாக்குறையை 3.62% ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…