ரூ.300 கோடி மதிப்பிலான நமக்கு நாமே திட்டம்;100 கோடி மதிப்பிலான வேலைவாய்ப்பு திட்டம் – தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!

Published by
Edison

சேலம்:ரூ.300 கோடி மதிப்பிலான நமக்கு நாமே திட்டம் மற்றும் 100 கோடி மதிப்பிலான நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

இன்று சேலம் மாவட்டம் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அரசு விழாவில் பங்கேற்றுள்ளார். தற்போது,சீலநாயக்கன்பட்டி நடைபெறும் அரசு விழாவில்,ரூ.300 கோடி மதிப்பிலான நமக்கு நாமே திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.இதனையடுத்து,31 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

மேலும்,வேலை இல்லா திண்டாட்டத்தை போக்கும் நோக்கில் 100 கோடி மதிப்பிலான நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.மேலும்,ரூ.60 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களையும் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

இவ்விழாவில்,முதல்வரோடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு,கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி,உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து,திமுக நிகழ்ச்சியிலும் முதல்வர் கலந்து கொண்டு மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீரபாண்டி ராஜா என்பவரது உருவப்படத்தையும் திறந்து வைக்கிறார்.

Recent Posts

ஒவ்வொரு 80 ஓவர்களுக்கும் 3 முறை பந்து மாற்றனும்…ஜோ ரூட் சொன்ன யோசனை!

ஒவ்வொரு 80 ஓவர்களுக்கும் 3 முறை பந்து மாற்றனும்…ஜோ ரூட் சொன்ன யோசனை!

லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…

10 hours ago

ஒட்டு கேட்கும் கருவி விவகாரம் : யார் மீது சந்தேகம்?-ராமதாஸ் சொன்ன பதில்!

விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…

10 hours ago

பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கை முறை – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…

11 hours ago

த.வெ.கவின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பா? விளக்கம் கொடுத்த சென்னை கமிஷனர்!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…

12 hours ago

கேஸ் போட்ட இளையராஜா..”அவுங்க வீட்டுக்கு மருமகளா போகவேண்டியது நான்”..வனிதா குமுறல்!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…

12 hours ago

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் என்ன? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…

14 hours ago