இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள அனிதா பள்ளி வளாகத்தில் மொட்டை போடும் தொழிலாளர்களுக்கு மாத ஊக்கத்தொகையாக ரூ.5,000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், புதிய திட்டங்களும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருகோயில்களில் மொட்டை போடுவதற்கு கட்டணம் இல்லை என்ற திட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், மொட்டை போடும் தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்குமாறு பல கோரிக்கைகளை எழுந்தது.
இதனை அடுத்து, திருக்கோயில்களில் மொட்டை போடும் தொழிலில் ஈடுபட்டு வந்த 1,749 தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள அனிதா பள்ளி வளாகத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த திட்டம் தொடங்குவதற்கு அடையாளமாக 250 பேருக்கு மாதம் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து, இன்று (ஜூன் 2, 2025) முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கடந்த…
சென்னை : தமிழ் திரையுலகில் மதயானைக் கூட்டம் மற்றும் ராவண கோட்டம் ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் விக்ரம்…
அகமதாபாத் : 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி பெங்களூர் அணிக்கு எதிரான முதல் தகுதிச்சுற்று போட்டியில் விளையாடியபோது…
அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த…
சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…
அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…