உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவுவதை தடுக்க மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்த வைரஸால் பொருளாதாரம், பங்கு சந்தை உள்ளிட்டவைகள் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. அந்த வகையில் கோழி இறைச்சி, முட்டை சாப்பிட்டால் கொரோனா பாதிப்பு ஏற்படும் என்று சமூக வலைத்தளத்தில் பரவி வரும் வதந்தியால், பொதுமக்கள் சிக்கன் மற்றும் முட்டைகளை தவிர்த்து வருகின்றனர். இதனால் கோழி, முட்டை கொள்முதல் மற்றும் விற்பனை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்நிலையில், ரூ.4.50 ஆக இருந்த முட்டை விலை தற்போது ரூ.1.50 ஆக குறைந்ததற்கு வதந்தியே காரணம் என கடைக்காரர்கள் புகார் தெரிவித்தனர். மேலும் ஒரு கிலோ ரூ.90 ஆக இருந்த கறிக்கோழி வதந்திகளால் ரூ.40 ஆக குறைந்துவிட்டது என்றும் குற்றம்சாட்டினர். கேரளா பறவை காய்ச்சல் மற்றும் கொரோனா எதிரொலியால் கடும் வீச்சியடைந்துள்ளது. பின்னர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 1 கிலோ ரூ.40, 2 கிலோ ரூ.70, 3 கிலோ ரூ.99 மற்றும் 100 கிராம் சில்லி சிக்கன் ரூ.15 மட்டுமே என்ற அதிரடி தள்ளுபடிகளை அறிவித்து வருகிறோம். இதனால் மக்களிடையே அமோக வரவேற்பு பெற்று வருகிறது என்று நாமக்கல் கோழிக்கடை வியாபாரிகள் கூறுகின்றனர். இதனிடையே கோழிகளுக்கு கொரோனா தொற்று என தவறான கருத்துகளை பரப்பிய 2 பேரை கைது செய்து நடவடிக்கை எடுத்ததை சுட்டிக்காட்டினர்.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…