உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவுவதை தடுக்க மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்த வைரஸால் பொருளாதாரம், பங்கு சந்தை உள்ளிட்டவைகள் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. அந்த வகையில் கோழி இறைச்சி, முட்டை சாப்பிட்டால் கொரோனா பாதிப்பு ஏற்படும் என்று சமூக வலைத்தளத்தில் பரவி வரும் வதந்தியால், பொதுமக்கள் சிக்கன் மற்றும் முட்டைகளை தவிர்த்து வருகின்றனர். இதனால் கோழி, முட்டை கொள்முதல் மற்றும் விற்பனை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்நிலையில், ரூ.4.50 ஆக இருந்த முட்டை விலை தற்போது ரூ.1.50 ஆக குறைந்ததற்கு வதந்தியே காரணம் என கடைக்காரர்கள் புகார் தெரிவித்தனர். மேலும் ஒரு கிலோ ரூ.90 ஆக இருந்த கறிக்கோழி வதந்திகளால் ரூ.40 ஆக குறைந்துவிட்டது என்றும் குற்றம்சாட்டினர். கேரளா பறவை காய்ச்சல் மற்றும் கொரோனா எதிரொலியால் கடும் வீச்சியடைந்துள்ளது. பின்னர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 1 கிலோ ரூ.40, 2 கிலோ ரூ.70, 3 கிலோ ரூ.99 மற்றும் 100 கிராம் சில்லி சிக்கன் ரூ.15 மட்டுமே என்ற அதிரடி தள்ளுபடிகளை அறிவித்து வருகிறோம். இதனால் மக்களிடையே அமோக வரவேற்பு பெற்று வருகிறது என்று நாமக்கல் கோழிக்கடை வியாபாரிகள் கூறுகின்றனர். இதனிடையே கோழிகளுக்கு கொரோனா தொற்று என தவறான கருத்துகளை பரப்பிய 2 பேரை கைது செய்து நடவடிக்கை எடுத்ததை சுட்டிக்காட்டினர்.
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…