சாகித்ய அகாடமி விருது வென்ற கே.வி.ஜெயஸ்ரீ.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் நாவலை தமிழில் பொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி அறிவிக்கப்பட்டது.

சாகித்ய அகாடமி விருது என்பது சிறந்த இலக்கிய படைப்பாளிகளுக்கு இந்திய அரசால் ஆண்டுதோறும் தேசிய அளவிலும், மாநில அளவிலும் வழங்கப்படும் உயரிய விருதாகும். இதில் இந்தியாவின் முக்கிய 24 மொழிகளில் வெளியாகும் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்றவற்றுக்கு விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் 23 மொழிகளுக்கான மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் கன்னட மொழிக்கு மட்டும் விருது அறிவிக்கப்படவில்லை. இந்த விருதில் மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் நாவலை, நிலம் பூத்து மலர்ந்த நாள் என தமிழில் பொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டது. இத்துடன் ரூ.50 ஆயிரம் ரொக்கம், செம்பு பட்டயமும் விருதாக அவருக்கு அளிக்கப்படும்.

இதுகுறித்து பேசிய கே.வி.ஜெயஸ்ரீ, மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் நாவலை தமிழில் மொழிபெயர்க்குமாறு எழுத்தாளர் ஜெயமோகன் பரிந்துரைத்தார். பின்னர் சங்க கால தமிழ் இலக்கியத்தை குறித்து மலையாள எழுத்தாளர் எழுதியிருந்தது தனக்கு வியப்பை அளித்தது. மேலும் மொழிபெயர்ப்புக்காக சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வானது மகிழ்ச்சியளிக்கிறது, என்றும் 20 ஆண்டுகளாக மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபட்டு வருகிறேன் என தெரிவித்தார். இதனிடையே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சாகித்ய அகாடமி விருது வென்ற கே.வி.ஜெயஸ்ரீக்கு வாழ்த்து கூறினார், அவர் மென்மேலும் இதுபோன்ற பல விருதுகளைப் பெற அன்பான நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

38 seconds ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

44 minutes ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

2 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

2 hours ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

2 hours ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

4 hours ago