சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது – மருத்துவமனை

Published by
பாலா கலியமூர்த்தி

சிகிச்சை பெற்று வரும் சசிகலா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த 20- ஆம் தேதி சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு காரணமாக அவர் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையின் தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் அவருக்கு உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், சசிகலாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. சுயநினைவுடன் இருக்கிறார். தாமாகவே உணவு உட்கொள்கிறார். உதவியுடன் சசிகலா நடக்கிறார் என்றும் கொரோனா அறிகுறிகள் இல்லாத நிலையில், சசிகலாவுக்கு தொடர்ந்து கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளது. மேலும் சசிகலாவிற்கு ஆக்சிசன் கொடுக்கப்படவில்லை என்றும் நேற்று வரை 2 லிட்டர் ஆக்சிசன் கொடுக்கப்பட்டு வந்தது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இன்று காலை 10.30 மணிக்கு பெங்களூர் சிறையிலிருந்து சசிகலா விடுதலை ஆன நிலையில், சிறை தண்டனை இன்று முடிந்தாலும் மருத்துவமனையில் சிகிச்சை தொடரும் என்றும் முழுமையாக குணமடைந்த பிறகு சசிகலா தமிழகம் வருவார் என்றும் பிப் 3-ஆம் தேதி சென்னை வருவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

40 minutes ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

1 hour ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

2 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

3 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

4 hours ago