தஞ்சையில் உள்ள சசிகலா வீட்டை இடிக்க உத்தரவு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை .
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவுக்கு, தஞ்சையில் மானம்புச்சாவடி எஸ்.பி.ஜி. மிஷன் சாலையில் சொந்தமாக வீடு மற்றும் காலியிடம் ஒன்று உள்ளது.இந்த வீடு யாரும் தங்க முடியாத அளவுக்கு இடியும் நிலையில் இருப்பதால் மாநகராட்சி அதிகாரிகள் இடிக்க வீட்டின் வாசலில் நோட்டீஸ் ஒட்டிவிட்டு சென்றுள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் அந்த வீட்டை ஆய்வு செய்த மாநராட்சி அதிகாரிகள் வீடு மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால் அது பொதுமக்களுக்கும் பள்ளி அருகில் உள்ளதால் குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று கூறி அந்த வீட்டில் தங்கியிருந்த மனோகர் மற்றும் வீட்டின் உரிமையாளர் சசிகலாவிற்கு மதுரை மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
அந்த நோட்டிஸில் இந்த தகவல் கிடைக்கப்பெற்ற 15 தினங்களுக்குள் வீட்டை இடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது .இந்நிலையில் இன்னும் வீடு இடிக்கப்படாததால் அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் இந்த வீடு மிகவும் பழுதடைந்து உள்ளதால் யாரும் உட்புறம் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை நோட்டீசை வீட்டு வாசலில் ஒட்டிவிட்டு சென்றுள்ளனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…