சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் அடுத்ததாக கைது செய்யப்பட்ட 5 காவலர்களை விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் ஆவணங்களை தயார் செய்து வருகின்றனர்.
சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜும், பென்னிக்ஸும் சிறையில் உயிரிழந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, முதலில் 5 போலீசார் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு, மேலும் 5 போலீசார் இந்த இரட்டை கொலை வழக்கில் விசாரணை வட்டத்திற்குள் சிக்கினர்.
இந்நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, இந்த வழக்கை சிபிசிஐடி போலீசாரிடம் இருந்து சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள், முதலில் கைது செய்யப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன் உட்பட 5 பேரிடம் 3 நாட்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு ஆவணங்களை சேகரித்தனர்.
இந்நிலையில், அடுத்ததாக கைது செய்யப்பட்ட 5 காவலர்களை விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் ஆவணங்களை தயார் செய்து வருகின்றனர். இந்த 5 காவலர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை மேற்கொள்ள உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள், ஏற்கனவே, வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசாரிடம் கலந்தாலோசித்து வழக்கு பற்றிய விவரங்களை மேலும், சேகரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…