எஸ்.பி.வேலுமணி சகோதரர் அன்பரசன் வீட்டில் பத்து மணி நேரத்திற்கு மேலாக நடந்த சோதனை நிறைவு பெற்றது.
அதிமுக ஆட்சியின் போது உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்கள் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள் என 55 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது சோதனை மேற்கொள்ளப்படும் இடங்கள் 60-ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சென்னை எம்.ஆர்.சி நகரில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் சகோதரர் வீட்டில் சோதனை நிறைவு பெற்றது. எஸ்.பி.வேலுமணி சகோதரர் அன்பரசன் வீட்டில் பத்து மணி நேரத்திற்கு மேலாக நடந்த சோதனை நிறைவு பெற்றது. இதற்கு முன் எஸ்.பி. வேலுமணியின் மைத்துனர் சண்முகராஜா இல்லத்தில் 7 மணி நேரமாக நடத்தப்பட்ட சோதனையில் எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என அதிகாரிகள் சான்று வழங்கிவிட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…
மலேசியா : தாய்லாந்து - கம்போடியா ஆகிய இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக மலேசிய பிரதமர்…
டெல்லி : பஹல்காமில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர்…