மாணவிக்கு பாலியல் வன்கொடுமை., போலி NCC முகாம்கள்., மாவட்ட ஆட்சியர் விளக்கம்.!

Published by
மணிகண்டன்

கிருஷ்ணகிரி : பள்ளி மாணவிக்குப் போலி NCC முகாமில் நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்த விசாரணை விவரங்களை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு செய்தியாளர்களிடம் கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார்ப் பள்ளி ஒன்றில் அண்மையில் நடைபெற்ற போலியான என்சிசி முகாமில் சுமார் 17 பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் கலந்து கலந்து கொண்ட 13 வயது பள்ளி மாணவிக்கு போலி என்சிசி பயிற்சியாளரால் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.

இந்த பாலியல் வன்கொடுமை புகாரின் பெயரில் போக்ஸோ பிரிவில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இதுவரையில் 10க்கும் மேற்பட்டோரைக் கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமனை நேற்று நள்ளிரவில் கிருஷ்ணகிரி காவல்துறையினர் கைது செய்தனர்.

NCC விளக்கம் :

பாலியல் வன்கொடுமை நடைபெற்றதாகக் கூறப்படும் பள்ளியில் NCC சார்பாக எந்த முகாமும் நடைபெறவில்லை என்று NCC தலைமை தற்போது விளக்கம் அளித்துள்ளது. குறிப்பிட்ட நாளில் எந்தவித NCC முகாமும் கிருஷ்ணகிரியில் நடைபெறவில்லை. இந்த பாலியல் வன்கொடுமை நிகழ்வுக்கும் NCCக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று NCC தலைமை விளக்கம் அளித்துள்ளது.

ஆட்சியர் செய்தியாளர் சந்திப்பு :

பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட  ஆட்சியர் கே.எம்.சரயு செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். அதில், ” தற்போது விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. புகார் வந்ததும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த புகாரை மறைக்க முயன்ற நபர்களையும் நாங்கள் கைது செய்துள்ளோம். போக்ஸோ பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நேற்றுவரை 9 பேர் கைதாகினர். இன்று முக்கிய குற்றவாளி (சிவராமன்) உட்பட 3 பேர் கைதாகி உள்ளனர்.

இவர்கள் போலியான சான்றிதழ் கொண்டு NCC முகாம்கள் நடத்தி வந்துள்ளனர். இவர்கள் எந்தெந்த பள்ளிகளில் முகாம்கள் நடத்தி உள்ளனர் என விசாரணை செய்து வருகிறோம். சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் அந்த போலி NCC நபர்களைப் பின்புலம் பரிசோதிக்காமல் முகாம் நடத்த அனுமதித்துள்ளனர். பள்ளிக்கல்வித்துறையால் கூறப்பட்டுள்ள எந்த விதிகளையும் பள்ளி நிர்வாகம் முறையாகப் பின்பற்றவில்லை.

இதே முகாமில் கலந்து கொண்ட மற்ற மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடமும் நாங்கள் விசாரணை செய்து வருகிறோம். இம்மாதிரியான சம்பவங்கள் நேர்ந்தால் உடனடியாக அரசு உதவி எண் 1098 என்ற எண்ணை உடனடியாக அழைக்க வேண்டும்.” என்று மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

நாய்க்கடி சம்பவங்கள் எதிரொலி: ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்!

சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…

24 minutes ago

மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மே 03) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர்…

43 minutes ago

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

8 hours ago

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

11 hours ago

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

13 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

14 hours ago