பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிகளை திறக்க வேண்டும் -மு.க. ஸ்டாலின்

Published by
Venu

நவம்பர் 16-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் அவசர கோலத்தில் அறிவித்திருக்கிறார் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நவம்பர் 30 -ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.நோய்க்கட்டுப்பாடு பகுதி தவிர மற்ற பகுதிகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள், அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மற்றும் கல்வி நிறுவனங்கள், பள்ளி / கல்லூரி பணியாளர்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும் வரும் 16-ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளித்தது தமிழக அரசு.

தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு வரும் 16-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக நேற்று பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,நவம்பர் 16-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் அவசர கோலத்தில் அறிவித்திருக்கிறார்.மாணவர்களின் பாதுகாப்பு ,விடுதி -உணவு போன்றவற்றை குறித்த குழப்பங்கள் நிலவுகின்றன.கொரோனாவின் இரண்டாவது அலை குறித்த உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதா  என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வெளி நாடுகளில் ஆய்வு செய்த உலக சுகாதார நிறுவனம், துவக்க பள்ளிகளை விட உயர்நிலை பள்ளிகளில் பாதிப்பு அதிகம் என கண்டறிந்துள்ளது.மாணவ, மாணவிகளின் உயிர் பாதுகாப்பு தலையாய முக்கியத்துவம் வாய்ந்தது.பெற்றோர் – ஆசிரியர் சங்கங்கள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோருடன் விரிவான ஆலோசனை நடத்த வேண்டும். பொங்கல் விடுமுறை முடிந்து 2021 ஜனவரி இறுதியில் அப்போதிருக்கும் சூழ்நிலைகளை ஆய்வு செய்து பள்ளிகளை திறக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பை நிறுத்தி வைத்து, மாற்று அறிவிப்பை வெளியிட்டு மக்களின் மனப்பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

20 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

22 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago