இருக்கை விவகாரம்! சபாநாயகர் அப்பாவு விளக்கம்.. பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. அப்போது கேள்வி, பதில் நேரத்தில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அவர் பேசுகையில், துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் மரபை மாற்ற வேண்டாம். எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக, 10 முறை கடிதம் அளித்துள்ளோம்.

3 சட்டமன்ற உறுப்பினர்களை நீக்க சொன்னதையும் நீங்கள் செய்யவில்லை. அதாவது, ஓபிஎஸ் உள்ளிட்ட 3 எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனைத்தொடர்ந்து, எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை தொடர்பாக பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக, சட்டம் விதி என்ன சொல்கிறதோ அதன் படி தான் நடக்கிறேன். நீங்கள் கொடுத்ததை மறுக்கவில்லை, இருக்கை விவகாரம் தொடர்பாக வீம்புக்காக நடக்கவில்லை, சட்டப்படி தான் நடக்கிறேன்.

சட்டமன்றத்திற்குள் இருக்கை குறித்து கேள்வி எழுப்ப உரிமை இல்லை. இருக்கைகள் ஒதுக்குவது எனது தனிப்பட்ட உரிமை என்றும் ஒருவர் எந்த சின்னத்தில் வென்று பேரவைக்குள் வருகிறாரோ அதே சின்னத்தில் தான் கடைசி வரை பார்ப்பேன் எனவும் இருக்கை ஒதுக்கீடு குறித்து 10 முறை கடிதம் அளித்துள்ளதாக இபிஎஸ் பேசியதற்கு சபாநாயகர் அப்பாவு விளக்கமளித்தார். எதிர்க்கட்சித் தலைவர் பேசி வரும்பொழுது ஓபிஎஸ் மற்றும் அவர் ஆதவாளர்கள் பேச முற்படுவதால் சட்டப்பேரவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதனால் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக, பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன்பின், எதிர்க்கட்சியினரை வெளியே அனுப்பும்படி சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.  சபாநாயகர் உத்தரவை தொடர்ந்து எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு பதிலில் திருப்தி இல்லை என கூறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இதனிடையே, எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையை ஓபிஎஸ்க்கு பதில் ஆர்பி உதயகுமாருக்கு வழங்க அதிமுக கோரிக்கை வைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அன்புமணி நடைப்பயணத்துக்கு தடை கோரி ராமதாஸ் மீண்டும் மனு.!

சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…

9 hours ago

கேரள கன்னியாஸ்திரிகள் மீது ஆள்கடத்தல், கட்டாய மதமாற்ற வழக்குப்பதிவு – மு.க.ஸ்டாலின் கண்டனம்.!

கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…

10 hours ago

நாய்-க்கு இருப்பிடச் சான்றிதழ்.., வினோத சம்பவத்தால் பீகாரில் எழுந்தது சர்ச்சை.!

பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…

11 hours ago

நெல்லை அருகே நடந்த ஆணவக் கொலையில் கைதான இளைஞரின் புகைப்படம் வெளியீடு.!

நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…

11 hours ago

“சிவகாசி தொகுதியில்தான் போட்டியிடுவேன்” – கண்ணீர் மல்க சூளுரைத்த ராஜேந்திர பாலாஜி.!

சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…

12 hours ago

பாஜக, திமுக நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் – விஜய் அறிக்கை.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…

12 hours ago