#Breaking:முதல்வர் ஸ்டாலினை,திடீரென்று சந்தித்த சீமான்,பாரதிராஜா..!

Published by
Edison

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் ஸ்டாலினை,திடீரென்று சந்தித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் பேசியுள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், சாந்தன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க வேண்டுமென,முதல்வர் ஸ்டாலின்,குடியரசுத்தலைவருக்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார்.

அதில்,”ஏழு பேர் விடுதலை குறித்து தமிழக அரசு கடந்த 9/9/2018 ஆம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்று விடுவிக்கவேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,முதல்வர் ஸ்டாலினை,தலைமைச்செயலகத்தில் திடீரென்று சந்தித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் 7 பேர் விடுதலை குறித்து பேசியுள்ளனர்.

இதுகுறித்து,செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான்,கூறுகையில் ,”தமிழக அரசின் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளது. என்று வாழ்த்து தெரிவித்தோம்.பின்னர்,7 பேர் விடுதலை குறித்து பேசியபோது,அவர்கள் சம்மந்தப்பட்ட வழக்கு,உச்சநீதிமன்றத்தில் வரவுள்ளது.எனவே,நீதிமன்ற தீர்ப்பில் என்ன வருகின்றது என்று பார்த்துவிட்டு,நாம் மேற்கொண்டு 7 பேரின் விடுதலை குறித்து முடிவு எடுப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும்,அவர்களின் விடுதலை தொடர்பான அனுமதிக்கான கையெழுத்து ஆளுநரிடமிருந்து,குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு சென்றுள்ளது.எனினும்,அவர்களின் விடுதலை குறித்து தொடர்ச்சியாக முயற்சி மேற்கொள்வோம்”,என்று முதல்வர் கூறியதாக சீமான் தெரிவித்துள்ளார்.

Published by
Edison

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

8 minutes ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

49 minutes ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

1 hour ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

2 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

2 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

3 hours ago