மக்களின் தலை மீது சுமையை ஏற்றும் பாஜக அரசின் கொடுஞ்செயலுக்கு கடும் கண்டனம் – சீமான்

Published by
பாலா கலியமூர்த்தி

எரிகாற்று உருளையின் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவது நாட்டு மக்கள் தலையில் விழுந்த பேரிடி என சீமான் கண்டனம்.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய்த்தொற்றால் மக்கள் நிற்கதியற்று, நிற்கையில் அவர்களது வாழ்வாதாரத்துக்கு எதுவுமே செய்யாத ஒன்றிய பாஜக அரசு, எரிக்காற்று உருளையின் விலை ரூ.875 ஆக உயர்த்திருப்பது மக்களிடம் பெரும் கொதிப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.

பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் நாட்டு மக்கள் பெருந்துயருக்கு ஆளாகி, அன்றாட செலவினங்களையே எதிர்கொள்ள முடியாது திணறி திண்டாடி கொண்டியிருக்கையில், எரிக்காற்று உருளையின் விலையும் தொடர்ந்து உயர்த்தப்படுவது தலையில் விழுந்த பேரிடியாக அமைந்திருக்கிறது.

தவறான பொருளாதார கொள்கையினால் நாட்டின் பொருளாதாரத்தை புதை குழிக்குள் தள்ளிவிட்டு, அதனை சமப்படுத்த மக்களின் மீது சுமையை ஏற்றும் பாஜக அரசின் கொடுஞ்செய கொடுஞ்செயல் கடும் கண்டனத்திற்குரியது. ஏழை, நடுத்தர வர்க்கத்து மக்களை பற்றி துளியளவும் சிந்திக்காது தனிப்பெரு முதலாளிகளின் லாபவேட்டைக்கு வாசல் திறந்துவிட்டு, குடிகளை நாளும் வாட்டி வதைக்கும் பாஜகவின் ஆட்சி மனிதகுலத்திற்கே எதிரானது என தெரிவித்துள்ளார்.

இதனிடையே சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 அதிகரித்து, ரூ.875 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் மத்திய அரசை கண்டித்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

1 hour ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

2 hours ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

3 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

3 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

5 hours ago