முக்கியச் செய்திகள்

Senthil Balaji Case: செந்தில் பாலாஜி ஜாமின் மனு.! செப்டம்பர் 11ம் தேதி விசாரணை..!

Published by
செந்தில்குமார்

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை காவல் முடிந்து, தற்போது நீதிமன்ற காவலில் புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடலாம் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் கோரும் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. அதாவது, ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ முறையிட்டனர்.

ஜாமீன் மனு மீதான விசாரணை விரைவில் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை, எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என்று முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்க கோரி அவரது தரப்பில் மீண்டும், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில்  முறையீடு செய்யப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க அதிகாரம் உள்ளதா? என்பது குறித்து முடிவெடுக்க நீதிபதி ரவி அறிவுறுத்தினார். உயர்நீதிமன்ற உத்தரவு இல்லாமல் தன்னால் விசாரிக்க முடியாது எனவும் நீதிபதி ரவி கருத்து தெரிவித்தார். இதனால் ஜாமீன் மனு விசாரணை மீது குழப்பம் நீடித்து வந்தது.இதனைத்தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கும் என உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவு மூலம் ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது என்று குழப்பத்துக்கு தீர்வு கிடைத்தது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை அடுத்து ஜாமீன் மனுதாக்கல் செய்துள்ளதாக முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லியிடம் முறையிட்டு உள்ளனர்.

இந்த முறையீட்டை ஏற்று நீதிபதி அல்லி மனுதாக்கல் செய்ய அனுமதி அளித்தார். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது செப்டம்பர் 11ம் தேதி திங்கள்கிழமை விசாரணை நடைபெற உள்ளது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 123-வது வழக்காக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

உடல் தகுதி இல்லை என்றால் விளையாடவே வேண்டாம்..பும்ரா குறித்து கடுப்பான திலீப் வெங்சர்க்கர்!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில்…

27 minutes ago

காசாவில் தினமும் 28 குழந்தைகள் கொலை…யுனிசெஃப் கவலை!

காசா :  கடந்த இரண்டு ஆண்டுகளாக தினமும் சராசரியாக 28 குழந்தைகள் காசாவில் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள்…

1 hour ago

உடல் நலக்குறைவால் இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்!

சென்னை : தமிழ் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளரும், நடிகருமான வேலு பிரபாகரன் (வயது 68), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள…

2 hours ago

நெல்லை : 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை.. 2 பேருந்துகளுக்கு தீ வைப்பு!

நெல்லை : மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது…

3 hours ago

கூகுள் ஃபைண்ட் ஹப் : சிம் எடுத்தாலும் இனிமே போனை கண்டுபிடிக்கலாம்..அசத்தல் அப்டேட்!

கூகுளின் Find My Device இப்போது Google Find Hub ஆக மாறி, ஆண்ட்ராய்டு ஃபோன்கள், இயர்பட்ஸ், புளூடூத் டிராக்கர்கள்…

3 hours ago

ரூ.12,000 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல்…பிரதமர் மோடி பீகார் பயணம்!

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 18, 2025) பிகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு பயணம்…

3 hours ago