இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு.! மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்றிய நீதிபதிகள்.!

Published by
மணிகண்டன்

மதுரை உயர்நீதிமன்றத்தில் உள்ள செந்தில் பாலாஜி வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றபட்டது. 

அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. மேலும் அவர் பொறுப்பில் இருந்த இரண்டு துறைகள் மற்ற அமைச்சர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த சண்முகசுந்தரம் எனும் வழக்கறிஞர் வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.

செந்தில் பாலாஜியிடம் இருந்த மின்சாரத்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை இருவேறு அமைச்சர்களிடம் பிரித்து வழங்கப்பட்டது. தற்போது செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வது ஆகியவை அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என கூறி அந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவிக்கு தடை விதித்தும் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கியும் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டது.

அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான இதே போன்ற வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் , இந்த வழக்கையும் அதோனோடு சேர்த்து விசாரிக்க கூறி, சண்முகசுந்தரம் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றி மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

இரட்டை சதம் விளாசி கிங் கோலி சாதனையை முறியடித்த கில்! புகழ்ந்து தள்ளிய கங்குலி!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…

1 hour ago

முதல் படத்திலே இப்படியா? சூப்பர் நண்பா! ‘ஃபீனிக்ஸ்’ படத்தை பாராட்டிய விஜய்!

சென்னை :  நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…

2 hours ago

இந்தியாவுக்கு 500% வரி..அமெரிக்காவில் புதிய மசோதா தாக்கல்!

வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…

3 hours ago

சுற்றுப்பயணம் குறித்து முடிவு? விஜய் தலைமையில் இன்று தவெக செயற்குழுக் கூட்டம்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

3 hours ago

உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய உலகச் சாம்பியன் குகேஷ்!

ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…

3 hours ago

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

4 hours ago