Breaking:பாலியல் புகார் – சுஷில் ஹரி பள்ளி நிர்வாகிகள் நேரில் ஆஜர்..!

Published by
Edison
  • பாலியல் புகார் அளிக்கப்பட்டது தொடர்பாக,சென்னையில் உள்ள குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில்,சுசில் ஹரி பள்ளி நிர்வாகிகள் 3 பேர் தற்போது நேரில் ஆஜராகியுள்ளனர்.
  • ஆனால்,சிவசங்கர் பாபா உட்பட 3 பேர் இன்று ஆஜராஜவில்லை.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்படும் சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர்,சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்தார்.

மாணவி சமூக வலைதளத்தில் கூறியதாவது:

  • “பத்தாம் வகுப்பு முடிக்கும் தருவாயில் இருந்த பொழுது,பள்ளி நிறுவனர் சிவ சங்கர் பாபா என்னை அழைத்து என்னுடைய ஆடைகளை கழட்ட முயன்றார். நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.மேலும் நான் அவரிடம்  இதை என்னால் செய்ய முடியாது என்று கூறினேன்.ஆனால்,அவர் தன்னை “இறைவன் கிருஷ்ணா” என்று கூறி பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தினார்.
  • ஆனால்,அதை ஒருபொழுதும் என்னால் செய்ய முடியவில்லை,அதனால் அவர் மிகவும் கோபமடைந்தார்.அதுமட்டுமில்லாமல் குழு உடலுறவுக்கு அவர் எப்போதும் என்னை அழைப்பார் நான் ஒருபோதும் அதற்கு செல்ல விரும்ப மாட்டேன்.
  • ஆனால் ஒருமுறை உள்ளே என்ன நடக்கிறது என்பதை பார்ப்பதற்காக நான் சென்றேன் அப்போது அவர் சிறுமிகளுக்கு விலை உயர்ந்த மதுபானங்களை கொடுத்து குழுவாக உடலுறவு செய்தார்.மேலும் அன்பு, கடவுள் என்கின்ற பெயரில் மாணவிகளை உடலுறவு வைத்துக் கொள்வதற்கு அவர் தூண்டுவார்”,எனப் பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து,முதற்கட்டமாக, கடந்த ஜூன் 1-ஆம் தேதி தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு குழு தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, அப்பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்.

ஆனால்,அங்கு சிவசங்கர் பாபா இல்லாத நிலையில்,மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வருகின்ற 11 ஆம் தேதி சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினார்.

  • இந்நிலையில்,சென்னையில் உள்ள குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில்,சுசில் ஹரி பள்ளி நிர்வாகிகள் நாகராஜன்,வெங்கட்ராமன் உட்பட 3 பேர் நேரில் ஆஜராகியுள்ளனர்.ஆனால்,சிவசங்கர் பாபா உட்பட 3 பேர் இன்று ஆஜராகவில்லை.
  • இதனையடுத்து,பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது தொடர்பாகவும்,சிவசங்கர் பாபா தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தப்பிக்க நினைக்கிறாரா?,மற்றும் ஆணையம் முன் அவர் ஆஜராகாததற்கு வேறு காரணம் உண்டா?..,அல்லது விளக்கக்கடிதம் ஏதேனும் சிவசங்கர் பாபா கொடுத்துள்ளாரா? என்று ,குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி கேள்வி எழுப்பி,பள்ளி நிர்வாகிகள் 3 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்.
Published by
Edison

Recent Posts

காயத்தால் மைதானத்திலிருந்து வெளியேறிய ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதி.!

காயத்தால் மைதானத்திலிருந்து வெளியேறிய ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதி.!

மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டின் முதல் நாளில் ரிஷப் பண்டுக்கு காயம் ஏற்பட்டது. மான்செஸ்டரில் உள்ள ஓல்டு…

2 minutes ago

“கோயில் நிலத்தில் குடியிருக்கும் ஏழைகளுக்கு நிலத்தை சொந்தமாக்கப்படும்” – எடப்பாடி பழனிசாமி.!

தஞ்சாவூர் : புரட்சித்தமிழரின் எழுச்சிப்பயணம் என்கின்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு,…

22 minutes ago

வயசானாலும் உங்க விளையாட்டு மாறல…பேட்டிங் பீல்டிங்கில் கலக்கிய டிவில்லியர்ஸ்!

நார்தாம்ப்டன் : ஜூலை 22 அன்று, இங்கிலாந்தின் நார்தாம்ப்டனில் நடந்த வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) டி20 தொடரில்,…

10 hours ago

அகமதாபாத் விமான விபத்து: பலியான பிரிட்டன் பயணிகள் உடல்கள் மாறி வந்துள்ளதாக உறவினர்கள் குற்றச்சாட்டு!

அகமதாபாத் : ஜூலை 23 அன்று, குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா…

11 hours ago

கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் போக்குவரத்து அபராத தொகை எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த ஐந்து ஆண்டுகளாக போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்ட அபராதத் தொகையில் சுமார் 450 கோடி ரூபாய் வசூலிக்கப்படாமல் நிலுவையில்…

12 hours ago

இந்தியாவில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு சீனர்களுக்கு சுற்றுலா விசா!

டெல்லி :  ஜூலை 23 அன்று, சீனாவில் உள்ள இந்திய தூதரகம் ஒரு அறிக்கை வெளியிட்டு, சீன குடிமக்கள் இந்தியாவுக்கான…

12 hours ago