அதிர்ச்சி : 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 12 வயது சிறுவன்…! காவல்துறை அதிரடி நடவடிக்கை…!

Published by
லீனா

17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 12 வயது சிறுவன் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்து கைது  செய்த போலீசார். 

தஞ்சாவூர் மாவட்டம் மனொலிப்பெட்டி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவரின் மகள் 17 வயது சிறுமி. இவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.  சமீபகாலமாக அவரது உடல்நிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அவருக்கு  திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, பெற்றோர்கள் சிறுமியை தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.  சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனை அடுத்து சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இது தொடர்பாக மகளிர் போலீசாருக்கு மருத்துவர்கள் உடனடியாக தகவல் அளித்தனர்.

தகவலின் அடிப்படையில் மருத்துவமனைக்கு விரைந்த போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பக்கத்து வீட்டில் உள்ள 12 வயது சிறுவன் தான் இதற்கு காரணம் என்றும், தன்னுடன் நெருக்கமாக பழகியதால் தான் கர்ப்பமானதாகும் அந்த சிறுமி கூறினார். இதைக்கேட்டு மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

பிறகு சிறுமியின் பெற்றோரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுவர்கள் பழகியது பற்றி தங்களுக்கு தெரியாமல் மறைத்து விட்டதாகவும், தனது மகள் கர்ப்பமாக இருப்பதை தங்களுக்கு கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் தெரியும் என்றும் பிரசவ வலி வந்ததால் தான்  மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட 12 வயது சிறுவனை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்பு நீதிபதி முன்பாக ஆஜர்படுத்திய நிலையில், காவல்துறை சிறுவனுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் சிறுவனை சீர்திருத்தப்பள்ளிக்கு தற்போது அனுப்பி வைத்துள்ளனர்

Recent Posts

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

7 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

8 hours ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

8 hours ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

9 hours ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

9 hours ago

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

10 hours ago