சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தற்போது பீப்பாய் 31.02 டாலராக இருக்கும் நிலையில், பெட்ரோல் விலை ரூபாய் 73.33 ஆக இருக்கிறது. மூலப் பொருளான கச்சா எண்ணெய் விலை குறையும்போது பெட்ரோ, டீசல் விலையும் குறைவதுதானே நியாயம் என்று மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக தலைவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து வருவதால், அதன் பலன்களை இந்திய நுகர்வோருக்கு வழங்கும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் விரைவாகச் செயல்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி விலை குறைப்பு பொருளாதார வளர்ச்சியையும் தூண்டும் என்று குறிப்பிட்டார். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது உடனடியாக உயர்த்தும் அரசுகள், இப்போது கடுமையான விலை சரிவின்போது பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டாமா? என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து கருத்தை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…