சிவசங்கர் பாபா மாணவிகளை வலுக்கட்டாயமாக வன்கொடுமை செய்ததாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் வைத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர், சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், சிவசங்கர் பாபா மீது 3 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபா மீது, 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையையும் ஏற்கனவே தாக்கல் செய்துள்ளனர்.
தற்பொழுதும் இது குறித்ததான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், 2011, 2012 மற்றும் 2013 இல் படித்த சுஷில்ஹரி பள்ளியின் மாணவிகளை சிவசங்கர் பாபா வலுக்கட்டாயமாக வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே சிவசங்கர் பாபாவுக்கு எதிராக இரண்டு குற்றப்பத்திரிக்கை தயாராகிவிட்டதாகவும், இன்னும் சில நாட்களில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இவர் மீதான இரண்டாவது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சென்னை மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கல்வி விருது விழா இன்று (மே 30) நடைபெற்று…
பாங்காக் : தாய்லாந்தின் ஃபூகெட்டில் உள்ள பிரபலமான சுற்றுலா பூங்காவில் ஒரு இந்திய மனிதனை புலி தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது விழா இன்று (மே 30) நடைபெற உள்ளது. இந்த…
சென்னை : கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் உயர்கல்வி பெறும் வகையில் 2025-26ம் கல்வி ஆண்டில் 4 புதிய அரசு கலை,…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் குஜராத்தும், மும்பையும் மோத உள்ளன. இந்தப் போட்டி முல்லன்பூரில் உள்ள மகாராஜா…
சென்னை : பாமகவில் தந்தை ராமதாஸுக்கும் மகன் அன்புமணிக்கும் இடையே இளைஞர் அணி செயலாளர் நியமனம் தொடர்பாக ஏற்பட்ட மோதல்…