ராகுல் காந்தி குறித்து அவதூறு கருத்து.! பாஜக நிர்வாகிக்கு அக். 13 வரையில் நீதிமன்ற காவல்.!

Published by
மணிகண்டன்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி பிரவீன் ராஜ் சில தினங்களுக்கு முன்னர் தனது கட்டுப்பாட்டில் சமூக வலைதள பக்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் பற்றி அவதூறு பரப்பும்  விதத்தில் கருத்து பதவிட்டு இருந்தார் என கூறப்படுகிறது. பிரவீன் ராஜ் பாஜகவில் சமூக வலைதள பொறுப்பாளராகவும் செயல்பட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து கரூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பிரவீன் ராஜ் மீது கரூர் சைபர் கிராம் போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது.  காங்கிரஸார் அளித்த புகாரின் பெயரில் கரூர் சைபர் கிராம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நேற்று இரவு ராசிபுரத்தில் பிரவீன் ராஜை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பிரவீன் ராஜ் இன்று கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சுஜாதா முன்னர் ஆஜர் படுத்தப்பட்டார். பிரவீன் ராஜை வரும் அக்டோபர் 13ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

பாஜக நிர்வாகி பிரவீன் ராஜ் விடுமுறை நாளில் நள்ளிரவில் கைது செய்யப்பட்டு, தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு இருப்பது குறித்து  பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

Published by
மணிகண்டன்
Tags: #BJP

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

7 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

7 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

8 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

9 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

9 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

10 hours ago