Puducherry Governor Tamilisai Soundarajan - Madurai High Court [File Image]
கடந்த 2018ஆம் ஆண்டு பாஜக தமிழக மாநில தலைவராக, தற்போதைய புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பில் இருந்தார். அப்போது அவர் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் தமிழிசை பயணித்தார். உடன் பயணித்த சக பயணியான மாணவி லூயிஸ் சோபியா தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழிசைக்கு எதிராகவும் , மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினார்
இதனால் மாணவி சோபியா மீது தூத்துக்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருந்தனர். தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் , நான் 2018ஆம் ஆண்டு அப்போதைய பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உடன் விமானத்தில் பயணித்தேன்.
அப்போது நான் மத்திய அரசுக்கு எதிராகவும், தமிழிசை சௌந்தராஜனுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினேன். அப்போது தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என்னை மிரட்டினர். என் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என சோபியா , மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், மாணவி மேல் பதியப்பட்ட வழக்கனது. சென்னை போன்ற பெரு நகரங்களில் பதியப்படும் வழக்கு பிரிவாகும். இதனை தூத்துகுடியில் பயன்படுத்த முடியாது என வாதிட்டனர் . இந்த வாதத்தை ஏற்று மாணவி லுயிஸ் சோபியா மீதான வழக்கை மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி தன்பால் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மதுரை : மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…