மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இ-பாஸ் பெற பொதுமக்கள் குவித்தனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு தமிழகத்திலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு அமலில் உள்ளதால் தேவையின்றி பொதுமக்கள் வாகனங்களில் வெளியே சுற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதையும் மீறி வருபவர்களுக்கு அபராதம், வழக்கு பதிவு, வாகனங்கள் பறிமுதல் போன்ற நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுரையில் வாகனங்கள் வெளியில் வர மாவட்ட ஆட்சியரிடம் அடையாள அட்டை பெற்றால் மட்டுமே வெளியில் வரமுடியும் என காவல்துறை அறிவித்ததால் இ-பாஸ் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குவித்தனர்.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்களில் பலர் சமூக இடைவெளி விதிகளை கடைப்பிடிக்காமலும் , பலர் முககவசம் அணியாமலும் இருந்தனர்.
அவர்களை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து அதிகாரிகளின் உத்தரவின்படி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாசல் மூடப்பட்டது.
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…