ஆவடி ராணுவ தொழிற்சாலையில் சக வீரரை சுட்டு கொன்ற வீரர்.!

Published by
murugan
  • திரிபுரா மாநிலத்தை சேர்ந்த நீலம்சின்ஹா என்பவர்  சில நாட்களாக மன உளைச்சலால் இருந்ததாக கூறப்படுகிறது.
  • பாதுகாப்பு வீரர்கள் தூங்கிக் கொண்டிருந்த அறையை நோக்கி நீலம்சின்ஹா  துப்பாக்கியால் சரமாரி சுட்டார்.இதில் கிரிஜெஷ் குமார் என்ற சக வீரர் மீது 6 குண்டுகள் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

சென்னை ஆவடியில் மத்திய அரசுக்கு சொந்தமான கனரக வாகன தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் பலர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த நீலம்சின்ஹா என்பவர்  சில நாட்களாக மன உளைச்சலால் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையெடுத்து இன்று அதிகாலை பாதுகாப்பு வீரர்கள் தூங்கிக் கொண்டிருந்த அறையை நோக்கி நீலம்சின்ஹா  துப்பாக்கியால் சரமாரி சுட்டார். இதில் தூங்கிக் கொண்டிருந்த இமாச்சல பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த கிரிஜெஷ் குமார் என்ற சக வீரர் மீது 6 குண்டுகள் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மேலும் தனது துப்பாக்கியை கொண்டு மற்ற வீரர்களை சுடப் போவதாக மிரட்டினர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பாதுகாப்புத் துறை அதிகாரி துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு கூறினார்.

சரணடையவில்லை என்றால்  சுட்டு தான் பிடிக்கப்படும் என கூற உடனடியாக துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு சரணடைந்தார். இறந்த கிரிஜெஷ் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அதிகாரிகள் நிலாம்பரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by
murugan

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

7 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

8 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

9 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

9 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

11 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

12 hours ago