சுரங்கம் வழியாக சுர்ஜித்தை மீட்க தயார் நிலையில் உள்ள வீரர்கள்..!

Published by
murugan

மணப்பாறை அருகில் நடுக்காட்டுபட்டியில் உள்ள வீட்டு தோட்டத்தில் விளையாடி கொண்டு 2 வயது சிறுவன் சுர்ஜித் 25-ம் தேதி மாலை 05.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். தற்போது வரை குழந்தையை மீட்கும் பணி 40 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று தொடர்ந்து வருகிறது.
சிறுவன்சுர்ஜித்தை மீட்க பல முயற்சி மேற்கொண்டு எல்லாம் தோல்வியில் முடிந்தது.  இந்நிலையில் தற்போது சிறுவன் சுர்ஜித்தை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதாவது ஆழ்துளை கிணறு அருகில் சுரங்கம் போல் மற்றொரு குழி தோண்டப்பட்டு அதன் மூலம் குழந்தையை மீட்க நடவடிக்கை எடுத்து உள்ளது.
இதற்காக ஓஎன்ஜிசியின் 96 டன் எடை கொண்ட ரிக் இயந்திரம் அதிகாலை 2.30 மணி அளவில் நடுக்காட்டுபட்டிக்கு கொண்டு வரப்பட்டு ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

குழி தோண்டும் இடத்தில் 17 அடிக்கு பிறகு பாறைகள் இருப்பதால் குழி தோண்டும் பணி தாமதம் ஆகிறது. எனவே 100 அடி குழி தோண்ட நான்கு மணி நேரம் கூட ஆகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் 100 அடி குழி தோண்டிய பிறகு இந்த குழியில் 3 தீயணைப்பு வீரர்களை இறக்கி விட்டு சிறுவன்சுர்ஜித்தை மீட்க திட்டம் செய்து உள்ளனர்.
100 அடி குழியில் இறங்க உள்ள வீரர்கள் அனைவரும் ஆக்ஸிஜன் உடன் தயார் நிலையில் உள்ளனர்.
 

Published by
murugan

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

6 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

7 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

7 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

8 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

8 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

8 hours ago