தலையை மொட்டை அடித்து முடியை விற்று பெற்ற பிள்ளைகளின் பசியை போக்கிய அன்புள்ளம் கொண்ட அம்மா.. மனதை நெகிழவைக்கும் சம்பவம்..

Published by
Kaliraj
  • பெற்ற பிள்ளைகளின் பசியை போக்க தலையை மொட்டை அடித்த தாய்.
  • மனதை நெகிழவைக்கும் சம்பவம்.

சேலம் மாவட்டம்  அம்மாபேட்டை பகுதியை  சேர்ந்தவர் செல்வம் வயது  37. இவரது மனைவியின் பெயர்  பிரேமா வயது 31. இந்த தம்பதிக்கு  மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள், வீமனுார் பகுதியில்,கடந்த  2015ம் ஆண்டு  செங்கல் சூளையில் பணியாற்றினர்.பின்  நண்பர் ஒருவரின் ஆலோசனையின் படி  கடன் வாங்கி, செங்கல் சூளை வைத்து,அதில் பெரும்  நஷ்டம் அடைந்தனர். இதன் காரணமாக அடந்த  கடன் தொல்லையால், ஏழு மாதங்களுக்கு முன், செல்வம் தீக்குளித்து தற்கொலை செய்தார்.

Image result for பசி

இவர்களுக்கு  உறவினர்கள் உட்பட யாரும் உதவ முன் வரவில்லை. இவரது மனைவி பிரேமா,அருகில் உள்ள  செங்கல் சூளை ஒன்றில், கூலி வேலைக்கு சென்று வருகிறார்.ஏற்கனவே  கந்து வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள்,தற்போது  பணம் கேட்டு தொந்தரவு செய்வதால், மனம் உடைந்த  பிரேமா கடந்த வாரம், தற்கொலைக்கு முயன்று, காப்பாற்றப்பட்டு உள்ளார். இந்நிலையில், தனது மூன்று குழந்தைகள் பசியால் துடித்ததால், தன் தலையை மொட்டை அடித்து, அந்த முடியை விற்பனை செய்து, தனது குழந்தைகளுக்கு உணவு வாங்கி கொடுத்துள்ளார். இந்த தாயுள்ளம் குறித்து அறிந்த, அதே பகுதியைச் சேர்ந்த பாலா என்ற இளைஞர் இந்த உன்னத தாயான  பிரேமாவை சந்தித்து,அவருக்கும் அவரது குழந்தைகளுக்கும்  உணவுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த மனதை உருகவைக்கும் சம்பவம் குறித்து அந்த இளைஞர்  கூறியதாவது, சமூக வளைதளமான ‘பேஸ்புக்’கில், இந்த தாயுள்ளம் கொண்ட பிரேமாவின் நிலை குறித்து பதிவிட்டோம். இதை அறிந்த கருணை உள்ளம் கொண்ட பலரின் உதவியால், 1 லட்சம் ரூபாய் வரை நிதி கிடைத்துள்ளது. இந்த நிதியை வைத்து, முதலில், கடன்காரர்களின் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்திவிட்டு அவரின் மூன்று குழந்தைகளின் படிப்புக்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம் என்று  அவர் கூறினார். இதற்கிடையில், பிரேமாவுக்கு தொல்லை கொடுத்து வரும், கந்து வட்டி கும்பல் குறித்து, காவல்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
Kaliraj

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

7 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

8 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

8 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

9 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

10 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

10 hours ago