தமிழக சட்டப்பேரவை செயலாளர் ஸ்ரீனிவாசன் வெளியிட்ட அறிவிப்பில் ,தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது.ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேரவையில் உரை நிகழ்த்த உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து 6-ஆம் தேதி நடைபெறும் அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று அறிவித்தார். கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சென்று அழைப்பு விடுத்தார்.இதனையடுத்து ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 6-ஆம் தேதி தொடங்கியது.முதல் நாளான அன்று (ஜனவரி 6) ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை நிகழ்த்தினார்.இதனால் சட்டப்பேரவை கூட்ட தொடர் எத்தனை நாட்கள் நடத்தப்படும் என சபாநாயகர் தனபால், எதிர்க்கட்சி கொறடா துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட ஆய்வுக்குழுவில் ஆலோசனை நடத்தி வரும் 9ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி நேற்று வரை இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்ட தொடர் நடைபெற்றது.இறுதியாக தமிழக சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…