TN Assembly speaker Appavu says about Tamilnadu CM MK Stalin [File Image]
இன்று சென்னையில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சபாநாயகர் அப்பாவு பேசுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் நடந்தவை என பல்வேறு அதிர்ச்சி தகவல்களை கூறினார்.
அவர் கூறுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக கட்சி களோபரமானது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பிறகு, 18 எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்து அதிமுக ஆதரவை பின் வாங்கினர். அந்த சமயம் டிடிவி தினகரன் திகார் சிறைக்கு சென்றார்.
நெருங்கும் தேர்தல்.. அதிமுக வியூகம் என்ன.? இன்று முக்கிய ஆலோசனை.!
அப்போது எனக்கு ஒரு நண்பர் தொடர்புகொண்டு , 40 அதிமுக எம்எல்ஏக்கள் அடுத்து எங்கே செல்வது என தெரியாமல் இருந்து வருகின்றனர். அவர்களை திமுக பக்கம் வரவழைத்து நாம் ஆட்சியை கைப்பற்றலாம் என கூறினார். இந்த தகவலை நான் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்தது முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கூறினேன்.
இந்த விஷயம் பற்றி சிறிது யோசித்து விட்டு, இந்த 40 அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவுடன் நாம் ஆட்சியை பிடிக்க வேண்டாம். நாம் நேரடியாக மக்களிடம் செல்வோம். அவர்கள் வாய்ப்பளித்தால் ஆட்சி அமைப்போம். என கொள்கை பிடிப்போடு இருந்தவர் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் என பெருமை பொங்க கூறினார் சபாநாயகர் அப்பாவு.
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…
லீட்ஸ் : இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 21-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், இந்திய…