10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்- அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரன்!

தேர்வெழுதும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக்கு துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரன் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஜூன் 30 வரை 5 ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து, மற்ற மண்டலங்களில் இன்று முதல் அரசு பேருந்துகள் 50% பயணிகளுடன் மண்டலங்களுக்குளேயே இயக்கப்பட்டு வருகிறது. தனியார் பேருந்துகளும் 60% பயணிகளுடன் இயங்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுத்தேர்வு எழுதும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக்கு துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரன் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இந்தி கட்டாயம் என்ற முடிவு வாபஸ்”…,மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் அறிவிப்பு!
June 30, 2025
“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!
June 30, 2025