மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் திமுக தலைவர் ஸ்டாலின் கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகி இருக்கிறது. அதிலும் தலைநகர் சென்னை தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனாவை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதைதொடர்ந்து தமிழக அரசு ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதாவது கொரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் இன்று முதல் டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறக்கப்படும் என அறிவித்தது.
ஆனால் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது. அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் தமிழக அரசை கண்டித்து திமுக தலைமையிலான கூட்டணி கட்சி தலைவர்கள் நேற்று அறிக்கை வெளியிட்டது.
அந்த அறிக்கையில், தமிழக அரசை கண்டித்து கருப்புச் சின்னம் அணிய வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு அலட்சியம் காட்டுகிறது. நாளை (அதாவது இன்று) காலை 10 மணிக்கு கருப்பு சின்னம் அணிந்து 5 பேர் வீட்டு வாசலில் 15-நிமிடம் எதிர்ப்பினை பதிவு செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தமிழக அரசுகளை கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். இதைதொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக , விடுதலைசிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போன்ற கூட்டணி கட்சிகளை சார்ந்த தலைவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…