நாடே பற்றி எரிகிறது! அது தொடர்பாக பேரவையில் விவாதிக்க வேண்டும்! – மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களுடன் வெளிநடப்பு!

Published by
மணிகண்டன்
  • புத்தாண்டிற்கு பிறகு முதல் முறையாக தமிழக சட்டப்பேரவை நேற்று தொடங்கியது.
  • இரண்டாவது நாளான இன்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.

2020ஆம் ஆண்டு தொடங்கி முதல் சட்டப்பேரவை கூட்டம் நேற்று தொடங்கியது. நேற்று முதல் நாளில் ஆளுநர் உரை நிகழ்த்தினார். நேற்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ .பன்னீர் செல்வம், எதிர்க்கட்சி தலைவார் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் என எம்.எல்.ஏக்கள் கலந்துகொண்டார்.  இதில் திமுகவினர் மற்றும் அதன் தோழமை காட்சிகள் நேற்று சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதே போல இன்று இரண்டாம் நாள் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இதிலும் முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக பேரவையில் விவாதம் கோரப்பட்டது. அதற்கு சட்டசபையில் அனுமதி கொடுக்கப்படாததால் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்புக்கு பிறகு பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின் பேசுகையில், ‘ குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தால் நாடே பற்றி எரிந்து வருகிறது. இந்த குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக விவாதம் நடத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால்  விவாதம் நடத்த அனுமதி அளிக்கவில்லை. அதனால் நாங்கள் வெளிநடப்பு செய்தோம் ‘ என்றவாறு ஸ்டாலின் கூறினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

14 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

44 minutes ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

1 hour ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

9 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

9 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

10 hours ago