மு.க ஸ்டாலின் மகள் செந்தமாரை வீட்டில் நடந்த வருமான வரிசோதனை நிறைவடைந்தது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. நாளை மறுநாளுடன் பிரச்சாரம் நிறைவடைவதால், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இறுதிகட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் , இன்று காலை திடீரென வருமான வரித்துறையினர் திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் மற்றும் திமுகவின் முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் 12 மணி நேரத்திற்கு பிறகு ஐடி சோதனை நிறைவு பெற்றது. தமிழகத்தில் சென்னை உட்பட 28 இடங்களில் சோதனை நடத்தியது தொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையில், சென்னை ,கோவை ,கரூர் ஆகிய இடங்களில் ஆவணங்கள் சிக்கியுள்ளன. சில குழுமங்கள், தனிநபர்கள் அரசியலில் பண விநியோகத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது. ஆனால், பணம் பறிமுதல் பற்றி குறிப்பிடப்படவில்லை.
சென்னையில் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வந்த போது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பரப்புரையில் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின் வருமானவரி சோதனையை கண்டு நானும் அஞ்சமாட்டேன், திமுகவும் அஞ்சாது என தெரிவித்தார்.
திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…