ரெடியா இருங்க…நாளை முதல்…15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு – முன்பதிவு லிங்க் இங்கே!

Published by
Edison

நாளை முதல் 15 முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்க உள்ளது.இதற்கான, முன்பதிவை கீழ்க்கண்ட இணையதள பக்கத்தில் பதிவு செய்யலாம்.

நாடு முழுவதும் 2 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளை 3 பிரிவுகளாக பிரித்து கொரோனா தடுப்பூசிக்கான பரிசோதனை நடைபெற்று வந்தது.அதில்,2 முதல் 8 வரை,8 முதல் 14 வரை,12முதல் 18 வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பரிசோதனை நடைபெற்றது. இந்த பரிசோதனை எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு முக்கிய மருத்துவமனைகளில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நடத்தப்பட்டது.

இந்த பரிசோதனையில் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியின் முதல் கட்ட சோதனையில் மற்ற தடுப்பூசிகளை ஒப்பிடும்போது குழந்தைகளுக்கு நல்ல பலனை அளிக்கக் கூடியதாக இருந்துள்ளது.இதனால்,பயோடெக் நிறுவனம் தனது தடுப்பூசியை மருந்துகள் கட்டுப்பாட்டு நிறுவனத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைத்திருந்த நிலையில்,பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை 12 லிருந்து 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்த இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் ஒப்புதல் வழங்கியது.

இதைத்தொடர்ந்து,கடந்த சில நாட்களுக்கு முன்னர் மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி,வருகின்ற ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்து 15 – 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என  அறிவித்தார்.இதனைத் தொடர்ந்து,15- 18 வயதான சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போட https://www.cowin.gov.in/ கோவின் இணையதளத்தில் நேற்று முதல் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேலும்,ஆதார் இல்லாதோர் பத்தாம் வகுப்பு ஐடி கார்டு மூலம் தடுப்பூசி போட முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,நாளை முதல் 15 முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கவுள்ளது. அதன்படி,தமிழகத்தில் ஜோன்ஸ் சாலையில் உள்ள மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறார் தடுப்பூசி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.எனவே,பெற்றோர்கள் தங்களது 15 முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகளை தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயார் நிலையில் வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதற்கிடையில்,15 முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு பள்ளிகளிலேயே கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

மேலும்,15 முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.அதன்படி,

  • கொரோனா தடுப்பூசி செலுத்த விரும்பும் மாணவர்களுக்கு சிறப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும்,இதற்காக ஒரு ஆசிரியரை சிறப்பு அதிகாரியாக தலைமை ஆசிரியர் பணியமர்த்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பள்ளிகளில் தடுப்பூசி பணிகளை ஒருங்கிணைக்க மாவட்ட அளவில் குழு அமைக்க வேண்டும்.
  • 2007 மற்றும் அதற்கு முன் பிறந்த பள்ளி மாணவர்களின் விவரங்களை அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • மாணவர்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள ‘கோவாக்சின்’ தடுப்பூசியை மட்டும் செலுத்த வேண்டும் என்பன போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

AI பயன்படுத்த போறோம்…12,000 பேரை பணிநீக்கம் செய்யும் TCS?

AI பயன்படுத்த போறோம்…12,000 பேரை பணிநீக்கம் செய்யும் TCS?

மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…

26 minutes ago

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…

1 hour ago

ஆபரேஷன் சிந்தூர் : மக்களவையில் இன்று 16 மணி நேரம் விவாதம்!

புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…

1 hour ago

தினமும் 10 மணி நேரம் நிறுத்திக்கொள்கிறோம்! காசாவில் கருணை காட்டிய இஸ்ரேல்!

ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…

2 hours ago

கர்ப்பிணி பெண்தான் டார்கெட்… சிறுமி வன்கொடுமை வழக்கு குற்றவாளி சொன்ன ஷாக்கிங் தகவல்!

திருவள்ளூர் : மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி,…

2 hours ago

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…

14 hours ago