வலுவான அதிமுக-பாஜக உறவின் உறுதி தொடரும்..! அறிக்கை வெளியிட்ட அண்ணாமலை..!

Published by
லீனா

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில், ‘தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றிகரமாக முன்னிறுத்திக் கொண்டிருக்கும் அதிஅதிமுக, தற்போது மிகவும் பலமாகவும் உறுதியாகவும் இருக்கிறது. இந்த பலமும் உறுதியும் மேலும் வலுப்பெறும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாக உறுதியாக இருக்கிறது. இந்த உறவும் உறுதியும் இனிமேலும் இப்படியே தொடர்வதையே பாரதிய ஜனதா கட்சி விரும்புகிறது.

அதிமுகவில் யாரை இணைத்துக் கொள்ள வேண்டும்? யாரையெல்லாம் நினைத்துக் கொள்ளக்கூடாது? என்ற முடிவுகளை எடுக்க அந்தக் கட்சியிலேயே தகுதி வாய்ந்த சிறந்த தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த முடிவுகளை எடுக்க முழு அதிகாரமும், தகுதியும் இருக்கிறது. அதில் தலையிடவோஅல்லது கருத்துச் சொல்லவோ எந்த மாற்றுக் கட்சிக்கும். (அது கூட்டணி கட்சியாக இருந்தாலும் கூட) அந்த உரிமை இல்லை என்பதை நான் உணர்ந்தவனாக இருக்கிறேன்.

பொதுவாகவே இந்தியா முழுவதும் பல கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்படும் பாஜக எந்த கட்சியின் உள்கட்சி விவகாரத்தில் உள்கட்சி ஜனநாயகத்தில் தலையிடுவதில்லை. அதை நானும் உறுதியாகக் கடைபிடிக்கிறேன். அதிமுக உறுதியாக இருக்க வேண்டும் என்று நான் சொன்ன கருத்திற்கு கண் காது மூக்கு ஜோடித்து ஊடகச்சித்திரம் வரையப்பட்டுள்ளது.

மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் திரு ஒபிஎஸ் அவர்களும், மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் திரு எடப்பாடி அவர்களும் கடுமையான காலத்திலும் கட்டுப்பாட்டுடன் கட்சியை கட்டிக்காத்து வந்துள்ளனர், மேலும், பாரதிய ஜனதா கட்சியுடன் மிகுந்த நல்லுறவைப் பேணி வந்திருக்கிறார்கள், நாங்களும் அதிமுகவும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த நல்லெண்ணத்துடன் மரியாதையுடனும் இருக்கிறோம்.

தேசிய ஜனநாயக கூட்டணி சிறப்பாக செயல்பட்டது, இனிவரும் காலத்திலும் சிறப்பாக செயல்படும் இதற்கு எடப்பாடி அவர்கள் தலைமையில் நடைபெற்ற அதிமுகவின் நல்லாட்சியே சாட்சி. ஆகவே அதிமுகவும்-பாஜகவும் எங்கள் உறவினை இன்னும் உறுதியுடன் முன்வைப்போம்.’ என தெரிவித்துள்ளார்.

Recent Posts

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

27 minutes ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

2 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

2 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

3 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

4 hours ago

MI vs GT: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…

5 hours ago