பாகுபாடின்றி அனைவரும் பயன்படுத்தும் வகையில், தரப்படுத்தி, சமவாய்ப்பை ஏற்படுத்திவிட்டு ஆன்லைன் வகுப்புகளை நடத்துக என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று நெஞ்சை கனமாக்கும் இரு செய்திகள்.உளுந்தூர்பேட்டை – மேட்டுநன்னாவரம் கிராமத்து விவசாயி ஆறுமுகத்துக்கு மூன்று மகள்கள். வசதி இல்லாததால் மூவருக்கும் சேர்த்து ஒரே செல்போன் வாங்கித் தந்துள்ளார். ஒரே நேரத்தில் மூவருக்கும் வகுப்புகள் எனில் யார் பயன்படுத்துவது? இதனால் ஏற்பட்ட விரக்தியில் மூத்த மகள் நித்யஸ்ரீ தற்கொலை செய்து கொண்டுள்ளார் .ஆலங்குடி – கபளம் கிராமத்தைச் சேர்ந்த ஹரிஷ்மா, நீட் தேர்வு எழுத வாய்ப்பு கிடைக்காத நிலையில் தற்கொலை செய்திருக்கிறார்.
நீட் தேர்வை பலிபீடம் என்பதும், அனைவருக்குமானது அல்ல ஆன்லைன் வகுப்புகள்’ என்பதும் இதனால்தான்.
ஆன்லைன் வகுப்புகளை அறிவிக்கும் முன் அனைவருக்கும் ஆண்ட்ராய்டு செல்போன் இருக்கிறதா? ஒரு வீட்டில் மூன்று குழந்தைகள் என்றால் தனித்தனியாக இருக்கிறதா ? தடையற்ற இணையம் இருக்கிறதா ? இணையத்துக்கு மாதம் தோறும் செலவு செய்யும் வசதி இருக்கிறதா – என எது குறித்தும் கவலைப்படாமல் அரசு அறிவித்ததால் ஏற்பட்ட மரணம் தான் நித்தியஸ்ரீயின் மரணம்.
கல்வி என்பது பட்டம் பதவிகளுக்கானது அல்ல; சம வாய்ப்பை வழங்காத எந்தக் கல்வியும் ஏற்றத்தாழ்வையும் விரக்தியையுமே விதைக்கும்.இதைச் சொல்வதால் ஆன்லைன் வகுப்புகளை எதிர்ப்பதாக பொருள் சொல்ல வேண்டாம். பாகுபாடின்றி அனைவரும் பயன்படுத்திக் கொள்வதாக ஆன்லைன் வகுப்புகளில் சமவாய்ப்பை ஏற்படுத்திவிட்டு நடத்துங்கள் என்றே சொல்கிறேன்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…