மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காததால் மருத்துவம் படிக்க முடியாத விரக்தியில் இருக்கும் மாணவர்கள் பொறியியல் கல்லூரியை தேர்வு செய்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் 12 ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து மருத்துவம் படிக்க விரும்பிய மாணவர்களுக்கு நீட் தேர்வு அடிப்படையில் போதுமான கட் ஆப் மதிப்பெண் இல்லை. இதனால், மருத்துவம் படிக்கலாம் என்ற கனவோடு இருந்த மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடம் கிடைக்காத சூழ்நிலை உருவாகியது. இறுதிவரை இடம் கிடைக்கும் என்று காத்திருந்த மாணவர்களுக்கு கலந்தாய்வு முடிந்து ஏமாற்றமே மிஞ்சியது.
இதனால். பொறியியல் கல்லூரிகளை தேர்வு செய்யும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர். அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் இருக்கும் பொறியியல் கல்லூரிகளுக்கு கலந்தாய்வு தொடங்கி நடந்து வருகிறது. ஏற்கனவே, 4 கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றது. இந்நிலையில், மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்த மாணவர்கள் சிறப்பு கலந்தாய்வில்கலந்து கொண்டு பொறியியல் கல்லூரிகளை தேர்வு செய்து வருகின்றனர்.
வழக்கமாக, 12 ம் வகுப்பில் தோல்வியடைந்த துணை தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்காக நடத்தப்படும் துணை கலந்தாய்வில் 500 மதிப்பெண் மேல் பெற்ற மாணவர்கள் கலந்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…