சென்னை திருவேற்காடு பகுதியில் நடைபெற்ற பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் ரூட் தல ஒருவரின் திருமண விழாவில் குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் மணமகன் கூட படித்த மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது, மணமக்கள் மேடையில் ஏறிய பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் பட்டாக்கத்தியை மணமகன் மற்றும் மணமகள் கையில் கொடுத்து கேக் வெட்ட சொல்லி அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதைத்தொடர்ந்து, மண மேடையில் புது தம்பதியினர் மற்றும் மாணவர்கள் பட்டாக் கத்தியுடன் நடனமும், ஆடியிருக்கின்றார்கள். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது. இதுபோன்று, நிகழ்வு கடந்த வாரத்தில் பிறந்தநாள் விழாவில் பட்டா கத்தி மூலம் கேக் வெட்டிய இருவர் கைது செய்யப்பட்டு சிறைல் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், திருமண விழாவில் பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டிய மாப்பிள்ளை மற்றும் தூண்டிய மாணவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…