சாந்தி சோஷியல் சர்வீஸ் மூலம் பலரின் பசி தீர்த்த “சுப்ரமணியம்”காலாமானார் .!

Published by
Ragi

சாந்தி சோஷியல் சர்வீஸ் என்ற அமைப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏழைகளின் பசியை தீர்த்த சுப்ரமணியம் காலாமானார்.

கோவையில் சாந்தி சோஷியல் சர்வீஸ் என்றாலே அனைவருக்கும் தெரியும் .அதன் மூலம் பல நற்பணிகளை செய்து வந்தவர் சுப்ரமணியம் . இவர் 1972-ம் ஆண்டு சாந்தி கியர்ஸ் நிறுவனம் என்பதை தொடங்கி அதன் மூலம் பல்வேறு நாடுகளுக்கு இயந்திர உதிர பாகங்களை தயாரித்து கொடுத்து வளர்ச்சியடைந்தார் .

அதனையடுத்து 1996-ம் ஆண்டு சாந்தி சோஷியல் சர்வீஸ் என்ற அமைப்பினை துவங்கிய இவர் அதன் அறங்காவலராகவும் இருந்தார்.இதனிடையே சமீபத்தில் இவர் தனது சாந்தி கியர்ஸ் நிறுவனத்தை வேறு நிறுவனத்திற்கு விற்ற பின்னர் சோஷியல் சர்வீஸை முழு நேர பணியாக செய்து வந்தார் .

அதன் படி லாப நோக்கமின்றி ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் உணவகம் , மருந்தகம், மருத்துவமனை உள்ளிட்டவற்றை நடத்தி வந்தார் . இந்த உணவகத்தில் மலிவு விலையில் உணவு அதாவது ரூ.5-க்கு டிபனும் ,ரூ.10-க்கு மதிய சாப்பாடு வழங்குவது மட்டுமின்றி தினமும் 60வயதுக்கு மேற்பட்ட 300 பேருக்கு இலவச உணவும் வழங்கி வந்தார் .

மேலும் அவர் தனது மருத்துவமனையில் உள்ள மருத்துவரின் கட்டணம் ரூ.30 மட்டுமே .அதே போன்று மருந்தகத்தில் மருந்து வாங்குபவர்களுக்கு 30% விலை குறைத்து வழங்கப்பட்டு வந்தது .இதுதவிர இந்த அமைப்பின் பெயரில் நடத்தப்படும் பெட்ரோல் பங்கிலும் ஸ்டாக் எடுக்கும் போது என்ன விலைக்கு டீசல் ,பெட்ரோல் விற்கப்பட்டதோ ,அந்த விலைக்கே ஸ்டாக் முடியும் வரை விற்பனை செய்யப்படும் .இதனாலையே இவரது அமைப்பு மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலமானது . இவ்வாறு மக்களும் பல ரீதிகளில் உதவும் சுப்பிரமணியம் இதுவரை ஊடகங்களிடம் தனது சேவைகளை குறித்து பேசியதோ ,அவரது முகத்தை காட்டவோ செய்ததில்லை .

மனிதநேயத்துடன் செயல்பட்ட 78 வயதான சுப்ரமணியம் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் .அவரின் முகம் பலருக்கும் தெரியாது என்றாலும் சாந்தி சோஷியல் சர்வீஸ் என்ற அமைப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏழைகளின் பசியை தீர்த்த அவரின் மறைவிற்கு பலர் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Published by
Ragi

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

2 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

3 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

3 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

4 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

5 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

5 hours ago