சனாதன சர்ச்சை பேச்சு.! தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.!

Published by
மணிகண்டன்

கடந்த செப்டம்பர் மாதம் சென்னை காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் “சனாதன ஒழிப்பு மாநாடு” என்பது நடைபெற்றது. அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , சேகர் பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி, “டெங்கு, மலேரியா போல சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்” என பேசியிருந்தார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வலுத்தது. உதயநிதிக்கு எதிராக வழக்குகளும் பதியப்பட்டன.

பெண்களே வாருங்கள் உலகமே உங்களுக்காக காத்திருக்கிறது… முதலமைச்சர் ஸ்டாலின் உரை!

ஜெகநாதன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக வழக்கு தொடர்ந்து இருந்தார். ஒரு மாநில அமைச்சராக மக்கள் பொறுப்பில் உள்ள ஒருவர் அரசியல் சாசனத்திற்கு எதிராக பேசியுள்ளார். உடன் இந்து அறநிலையத்துறை அமைச்சரும் இருந்துள்ளார். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட வேண்டும் என கோரப்பட்டு இருந்தது.

இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு, தனிநபர் அளித்த புகாரின் பெயரில் அமைச்சர் மீது உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது. அமைச்சர் பேசியதை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது என கூறியது.

இருப்பினும், அமைச்சர் பொறுப்பில் உள்ள ஒருவர் இவ்வாறு பேசியதற்கு தமிழக அரசு 4 வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்ற அமர்வு.

Recent Posts

இறுதிப்போட்டியை நோக்கி பயணம்.., நாளை குவாலிஃபயர் 2 சுற்றில் பஞ்சாப்பை வீழ்த்துமா மும்பை.!

அகமதாபாத் : 2025 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சாம்பியன் பட்டம் வெல்ல இன்னும் இரண்டு போட்டிகள்…

8 minutes ago

தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் அரசு பணிகளில் இருந்து 8,144 பேர் ஓய்வு.!

சென்னை : தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் (மே 31, 2025) சுமார் 8 ஆயிரத்து 144 பேர் அரசுப்…

48 minutes ago

கேரளாவில் ரெட், ஆரஞ்சு எச்சரிக்கை!! கனமழையால் 10 பேர் உயிரிழப்பு.., விரைந்தது NDRF குழு.!

திருவனந்தபுரம்: கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் தென்மேற்கு பருவமழை நாளை (ஜூன் 1) முதல்…

1 hour ago

ஆசிய தடகள போட்டி – தங்க பதக்கங்களை குவிக்கும் இந்தியா.!

கொரியா : கொரியாவின் குமியில் தற்போது நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் இன்றைய தினம் இந்திய தடகள வீரர்கள் தங்கப்…

2 hours ago

கொரோனா பரவல் எதிரொலி: ‘பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும்’ – தமிழ்நாடு சுகாதாரத்துறை.!

சென்னை : மத்திய சுகாதாரத்துறையின் அறிக்கையின் படி, நாடு முழுவதும் 1,828 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 15 பேர்…

2 hours ago

தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் வழங்க அதிமுக முடிவு.? இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு.!

சென்னை : தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவைத் தேர்தலில்…

2 hours ago